Saturday, July 13, 2013

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

உலகெங்கிலும் மனிதர்கள் மீதான அடக்குமுறை மனிதர்களாலேயே வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது .இனம் ,மதம்,மொழி மற்றும் சாதி சார்ந்து உலகம் முழுக்கவே அடக்குமுறைகள் நிகழ்கின்றன .இன்னொரு மனிதனை அடக்க நினைக்கும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான சாதி வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . சாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . சாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில் சாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . பள்ளியிலிருந்து தொடங்க வெண்டும். சேர்க்கையின் போதே சாதி கேட்கப்படுகிறதே.  மனிதன் எப்போதுமே தனக்கு கீழ் அடிமையாக யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆண்டான் அடிமை மனநிலை இன்னும் மாறவில்லை .பொருளாதார வளர்ச்சி மட்டுமே இன்று தீர்வாக இருக்கிறது . எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிகாரமும் , பணமும் மட்டுமெ நம் சமூக அமைப்பில் மரியாதையைத் பெற்றுத்தருகிறது . அதை எல்லோரும் அடையவிடாமல் தடுக்கவே ஒரு பெரும் கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது.

நம் பெயரைச் சொல்லும் போதே நம் மதத்தையும் சேர்த்தே சொல்கிறோம்.தமிழன் என்று சொல்லும் போதே நம் இனதத்திலுள்ள சாதிகளையும் சேர்த்தே சொல்கிறோம்.சாதி இல்லாமல் போக தமிழன் என்ற இன அடையாளத்தை துறக்க வேண்டும்.எத்தனை பேர் தயார்? சாதி அடையாளத்தை வெறுக்கும் அல்லது வெறுக்க நினைக்கும் பலர் இன அடையாளத்தை துறக்கத் தயாறாக இல்லை.சாதி,மதம் ,இனம்,மொழி,மாநிலம்,நாடு சார்ந்த பேதங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. பேதங்களால் வரும் பிரச்சனைகளை சிறிது சிறிதாகத்தான் குறைக்க முடியும் .பிரச்சனை வரும்போது மட்டும் ஒன்று கூடி கத்திப் கத்திப் பேசிவிட்டு ஓய்ந்து விடுவதால் ஒன்றும் நடக்காது .

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் சாதி,மத,இன ரீதியான பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது . பெண் தாழ்ந்த சாதி என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்து,  ஆண் உயர்ந்த சாதி  என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்துவிட்டால் அங்கே பிரச்சனை மூடி மறைக்கப்படுகிறது .மூடத்தனமான கலாச்சாரக் கூறுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாதவரை இம்மாதிரியான பிரச்சனைகள் அரசியலாக்கப்படும் .
முதலில் ஒட்டு மொத்த பெண் விடுதலைக்காகப் போராடுவோம் .பிறகு சாதிக்கு எதிராக போராடுவோம்.

கற்காலத்தை நோக்கிப் பயணித்தால் மட்டுமே பொதுத்தளம் சாத்தியம்.பூமியில் எந்தப்பகுதியில் வாழும் மனிதனும் நம்மைப் போலவே குருதியும் , மூக்கிலே மூச்சு விடக்கூடியவள்/வன் தான் என்பதை உணர்ந்து எல்லோரும் மனிதர்கள் என்ற நிலையை அடைந்து பூமியில் இருக்கும் எல்லோரும் உயிரினங்கள் என்ற நிலையை அடைய வேண்டும். எப்பொது???

மேலும் படிக்க:

கலாசார விடுதலையே சமூக விடுதலை !  

ஒன்று எங்கள் ஜாதியே ...!  

கட்சி அரசியலை வேரறுப்போம் !  
..................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms