Saturday, October 29, 2016

வா வா வசந்தமே !


1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது .தீபாவளி பண்டிகையை நினைவு படுத்தும் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பவர் ,மலேசியா வாசுதேவன். வைரமுத்து எழுதிய இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் . மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த மெல்லிசைப்பு பாடல்களில் இதுவும் உண்டு . மென் சோகம் கலந்திருக்கும் இப்பாடலை ஜீவனுடன் பாடியிருக்கிறார் , வாசுதேவன். 

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

ஆகாயமே எந்தன் கையில்
ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம்
தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

என் வானிலே ஒரு தேவ
மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி
விட்டுச் சென்றது
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன்

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

நல்ல பாடல் !

மேலும் படிக்க :


..................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms