Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !


வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில....

'னுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '

 - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி.

'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும் 

தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனுமாமே !'


- திருமூலர் , 'கடலுக்கு அப்பால் ' நாவலில் இடம் பெற்றுள்ளது.

லகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேதமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்...'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன்.

ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். '
- காகித மலர்கள் நாவலில் ஆதவன் .

'யற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது .'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன் 

' ன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?
இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் '

- காகிதமலர்கள் நாவலில் ஆதவன் .

'ந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் . மேன்மையடையச் செய்ய முடியும் . ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது .செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது . ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை ,கல்வித் திட்டம் இவை தனி மனித வேட்கைகளை , கனவுகளை ஒடுக்குகின்றன .'

- "காகித மலர்கள் " நாவலில் ஆதவன்.

 'ரீட்சை பாஸாகி, எவனிடமோ வேலைக்குப் போய் மாசச் சம்பளத்துக்கு மாரடித்துக்கொண்டு , காலாகாலத்தில் சுயமாகவோ நிர்ப்பந்திக்கப்பட்டோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , எனக்கு வேண்டிய பிரதிபிம்பங்களை அவர்களிடம் தேடி என்னையும் அவர்களையும் சலிக்கச் செய்துகொண்டு, அவர்களையே நான் தொடர்ந்து உயிர் வாழ ஒரு நோக்கமாக்கிக்கொண்டு , அவர்களும் என்னை அப்படியே ஆக்கிக்கொண்டு , ஒருவரோடொருவர் இறுகப் பிணைத்துக்கொண்டு , இந்தப் பிணைப்பை உன்னதமானதாகக் கற்பித்துக்கொண்டு , அந்தக் கற்பனையின் பளபளப்பு மங்காமலிருக்க எப்போதும் ஏதேதோ வகைப் பாலிஷ்களால் அதன் மேல் தேய்த்துக்கொண்டு... சே, அபத்தம் ,அபத்தம் . வாழ்க்கையே வெறும் அபத்தம். '

- " என் பெயர் ராமசேஷன் " எனும் நாவலில் ஆதவன் .

மேலும் படிக்க :



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms